குடிநீருக்காக முதியவர் குத்தி கொலை... தென்காசியை அதிர வைத்த கொடூரம் | Tenkasi

Update: 2024-03-30 17:41 GMT

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் தென்காசியில் அரங்கேறியுள்ளது.

கடையநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், தனது வீட்டிற்கு தேவையான தண்ணீரை, அருகில் வசிக்கும் தனது உறவினரான லட்சுமணன் வீட்டில் பிடித்து வந்துள்ளார். தண்ணீர் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சுமணன், இதுதொடர்பாக மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லட்சுமணன், கத்தியால் மாரியப்பனின் நெஞ்சில் குத்தியதில், படுகாயமடைந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சைப் பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் லட்சுமணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்