பச்சிளம் குழந்தையை கொலை செய்து வீசிய தாய்.. விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-07 07:14 GMT

கொச்சியின் பனம்பிள்ளி நகர் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு அருகே கடந்த 3 தேதி பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக கட்டி சாலையில் வீசப்பட்டிருந்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த போது, இறந்தது ஆண் குழந்தையின் சடலம் என தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியிலிருந்து பொட்டலம் தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகி இருந்தது. ஒரு தளத்தில் வசிக்கும் திருமணம் ஆகாத பெண், அவரது பெற்றோரை போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்