திடீரென ஆர்ப்பரித்து வந்த வெள்ளம் - ஆற்றோடு அடித்துச்சென்ற இளைஞர் - விருதுநகரில் பரபரப்பு

Update: 2023-10-23 15:00 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய இளைஞரை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர். விடுமுறைதினத்தை ஒட்டி, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்காக சென்றனர். அப்போது சாஸ்தா கோவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்த வனத்துறையினர், இளைஞரை பத்திரமாக மீட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்