3 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு
3 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டு
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில் இருந்து நேற்று 97 விசைப்படகுகளுடன், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அதில் ரத்தீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அருள், ஐயப்பன், சுந்தரம் ஆகியோர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்ககோரி சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்