"அரசு தரப்பு சாட்சிகளை சிறப்பு நீதிமன்றம் நம்பவில்லை" - சிபிஐ

Update: 2023-11-09 10:16 GMT

2ஜி வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளை சிறப்பு நீதிமன்றம் நம்பவில்லை என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது. 2ஜி வழக்கில் மேல்முறையீடு அனுமதி மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சிபிஐ தரப்பில் வாதிட்ட சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின், 2ஜி வழக்கு கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டி, அரசு தரப்பு சாட்சிகளை சிறப்பு நீதிமன்றம் நம்பாததையும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாட்சிகளை நம்பியதையும் குறிப்பிட்டு வாதிட்டார். தொடர்ந்து வழக்கு நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்