BREAKING || சிறையில் வைத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது... கோவையில் இறங்கிய சென்னை போலீஸ்

Update: 2024-05-09 09:08 GMT

 சிறையில் வைத்து சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. கோவையில் இறங்கிய சென்னை போலீஸ்

சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் கொடுத்திருந்த புகாரின் பேரிலும் , தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரிலும் சென்னை போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த இரு வழக்குகளிலும் யூ டியுபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறையில் இன்று கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா்..

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட வழக்கு எண்ணிக்கை 5 ஆக உயர்வு. கோவை, தேனி, திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போடப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கரிடம் நேரில் கொடுத்துள்ளனர் 

Tags:    

மேலும் செய்திகள்