தீடீரென தர்ணாவில் குதித்த எம்.எல்.ஏ...சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Update: 2024-03-14 05:19 GMT

அரசு மருத்துவமனையை பார்வையிட்ட எம்.எல்.ஏ. மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் அதிருப்தி திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு சேலம் மாவட்டம், அரசு மருத்துவமனை நுழைவாயிலில், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேட்டூர் அரசு மருத்துவமனையை பார்வையிடுவதற்காக, எம்.எல்.ஏ., சதாசிவம் வருகைபுரிந்தார். அப்போது, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதை கண்டறிந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்