சேலம் மேயர் மருமகள் சாவில் மர்மம் .. "சோறு போட்டிருந்தால் பிழைத்திருப்பார்" - தம்பி அதிர்ச்சி பேட்டி

Update: 2024-02-01 04:01 GMT

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மகன் சுதர்சன் பாபு, மனைவி சுதாவுடன் சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்நிலையில், சுதாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதா உடல் நலக்குறைவால் உயிர் இழக்கவில்லை என்றும், பட்டினி போட்டு சாகடித்தனர் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்