சுவாமி திருக்கல்யாண வைபவம் - அதிமுக, திமுகவினர் இடையே வாக்குவாதம்... சேலத்தில் பரபரப்பு

Update: 2024-04-23 02:30 GMT

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோயில் நிர்வாக குழு பொறுப்பாளர் முத்துமாணிக்கம் என்பவர், சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பாக, திடீரென திமுக நகர அவைத்தலைவர் மாதையன் என்பவருக்கும், திமுகவைச்சேர்ந்த நகர்மன்ற தலைவர் பாஷாவிற்கும் சால்வை அணிவித்தார். அப்போது அதிமுக நகர செயலாளர் முருகன் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்து வைத்தனர். இதனால் கோவிலில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்