மருத்துவமனையில் உயிரிழந்த ரவுடி... நேரில் ஆய்வு செய்த நீதிபதி

Update: 2024-03-12 04:52 GMT

நெல்லை மாவட்டம், தென்திருப்பவனத்தைச் சேர்ந்த பேச்சித்துரையும், அவரது கூட்டாளி சந்துருவும் கடந்த 7-ஆம் தேதி மது போதையில், திருப்பிடைமருதூரில் அரசு பேருந்தை சேதப்படுத்தி ஓட்டுநரை வெட்ட முயற்சித்தனர். அப்போது அவர்களை பிடிக்க முயன்ற காவலர் செந்தில் குமாரை தாக்கி விட்டு, அவர்கள் தப்பி ஓடினர். அங்குள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர்களை தாக்கி விட்டு தப்ப முயன்றனர். அப்போது, போலீசார், பேச்சித்துரையை மூட்டுக்கு கீழ் சுட்டு பிடித்ததுடன் சந்துருவை கைது செய்தனர். இதில், காயமடைந்த காவலர் செந்தில் குமாரும், துப்பாக்கியால் சுடப்பட்ட பேச்சுத்துரையும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வந்த பேச்சித்துரை திங்கள்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பேச்சித்துரையின் உடலை சேரன்மகாதேவி நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்