ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி.. பரவும் காட்சிகள் | rameshwaram

Update: 2024-04-28 07:41 GMT

ராமேஸ்வரத்தில், கையுறைகள் இன்றி தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கழிவுநீர் வடிகாலில் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குக் கையுறை, காலணி உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு உபகரணமும் வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்