அசுர வேகத்தில் கடைக்குள் புகுந்த பேருந்து.. சுக்குநூறாக நொறுங்கிய வாகனங்கள்.. | Thanthitv

Update: 2024-03-22 04:04 GMT

ராமநாதபுரத்தில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து புதுமடம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து, பேருந்து நிலையம் அருகேயுள்ள எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி உட்பட ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்