காவலரை கீழேதள்ளி தாக்கிய பெண் கைதி - பரபரப்பான புழல் சிறை

Update: 2024-04-24 11:34 GMT

திரிபுராவை சேர்ந்த சலே மாகாதூன் என்ற பெண் கைதி போதை பொருள் கடத்தல் வழக்கில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் கைதிகளை அறையில் அடைக்கும் போது சலே மாகாதூன் பெண் காவலர் சசிகலாவிடம் தகராறில் ஈடுபட்டு சீருடையை பிடித்து தாக்கியதோடு அவரை கீழே தள்ளி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை கண்ட சக காவலர்கள் பெண் கைதியை அறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் கைதி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்