பைக்கை ஆட்டைய போட நினைத்தவரை தோலுரித்து தொங்கபோட்ட மக்கள்

Update: 2024-02-01 02:17 GMT

புதுக்கோட்டை அருகே, இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த இருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். திருமயம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் வெங்கட் ஆகியோர், பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு, இருவரையும் கையும் களவுமாக பிடித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்