"மிரட்டி மிரட்டியே மணல் திருட்டு.." - "மாஃபியாவாக மாறிய ஊராட்சித் தலைவர்" - கதறும் ஊர்மக்கள்

Update: 2024-05-09 13:34 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரிய குளம், உப்பங்குளம், கோரையாறு உள்ளிட்ட குளங்கள், ஆற்று படுகைகளில் அரசு அனுமதி பெறாமல் சரளை மண் மற்றும் ஆற்று மணலை அள்ளி வெளியூர்களில் விற்பனை செய்வதாக ஊராட்சி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இது குறித்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஊராட்சி தலைவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்