திடீரென சாலை மறியலில் குதித்த மக்கள் - மதுரையில் பரபரப்பு

Update: 2023-10-26 02:55 GMT

மதுரை அவனியாபுரத்தில், தனியார் பள்ளியில் அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவனியாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் தற்காலிக செயலாளராக இருந்த சிவா என்பவர் கடந்த மாதம் 24-ம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் குண்டர்கள் சிலருடன் இன்று பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த சிவா, அலுவலக அறைகளை பூட்டி, சிசிடிவி கேமரா வயர்களை அறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகாரளித்த நிலையில், சிவாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்ய வேண்டுமென கூறி மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அத்துமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்