திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் குறித்த வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-03-09 15:16 GMT

பதவி உயர்வு பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்காததை எதிர்த்து,

திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அதிகாரிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது. அத்துடன், திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் அரசு, பொதுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என அறிவிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க பல்கலைக் கழக மானியக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்