இப்போ உன் அன்ப நான் புரிஞ்சிகிட்டேன்.. கீழ இறங்கு.. நீ தான்யா எனக்கு முக்கியம்" நிரூபித்த கணவன்.. ஏற்றுக்கொண்ட மனைவி

Update: 2023-08-07 06:13 GMT

கோவை, செட்டிப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி காளீஸ்வரி. தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கிடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில், காளீஸ்வரி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றதால் விரக்தியடைந்த செல்வம், தனது குழந்தையுடன் அருகில் இருந்த 250 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், தனது குடும்ப பிரச்சினையை தீர்த்து வைத்து, தன்னையும், தனது மனைவியையும் சேர்த்து வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, செல்வத்தின் மனைவி காளீஸ்வரி வரவழைக்கப்பட்ட நிலையில், இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாம் சேர்ந்தே வாழலாம் என காளீஸ்வரி சமாதானம் பேசிய நிலையில், செல்போன் டவரில் இருந்து குழந்தையுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்