விரைவில் தேர்வு முடிவுகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு

Update: 2023-11-26 03:25 GMT

ஒட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கான காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்பும் பொருட்டு, கடந்த 19ஆம் தேதி 10 மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 9 ஆயிரத்து 352 பேர் பங்கேற்ற இந்த தேர்வின் விடைக் குறிப்பு அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட OMR விடைத்தாள் மற்றும் மதிப்பெண் ஆகியவை 27ஆம் தேதி இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள், Application no உபயோகித்து OMR விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டுநர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்