"கைரேகை விழலைனு.. ரூ.6000, பொங்கல் பரிசு-னு ஒன்னும் கிடைக்கல" கண்ணீர்விட்டு கதறும் ஆதரவற்ற மூதாட்டி

Update: 2024-01-12 09:17 GMT

சென்னை அம்பத்தூர் அருகேவுள்ள மாதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி, கைரேகைப்பதிவு விழவில்லை என்பதால் தனக்கு வெள்ள நிவாரணம் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க ரேஷன் கடை அதிகாரிகள் மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கணவர் மற்றும் மகன் இறந்துவிட்ட நிலையில் உறவினர்கள் வீட்டில் அந்த மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், கைரேகைப்பதிவு விழாததால் தனக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் மறுக்கப்படுவதாக கூறியுள்ள அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்