அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நித்யானந்தா ஆசிரமம் - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

Update: 2023-08-15 15:38 GMT

சென்னை பல்லாவரத்தில், நித்தியானந்தா ஆசிரமத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலத்தை அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினர்.

பச்சையம்மன் நகர் குவாரி சாலை பகுதியில் நித்தியானந்தா ஆசிரமம் உள்ளது.

இந்த ஆசிரமம், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் நில அளவீடு செய்யப்பட்டபோது, சுமார் ஒரு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் அரசு நிலம் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்