"ஓட்டு கேட்டு இந்த பக்கம் வந்தீராதீங்க" - கொந்தளிக்கும் மக்கள்

Update: 2024-03-28 08:36 GMT

நெல்லை மாவட்டம் தஞ்சைபுரம் கிராமத்தில் நான்கு மாதங்களாக மழை நீர் வடியாததால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். வீடுகளைச் சுற்றி ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவும் சூழல் இருப்பதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும், ஓட்டு கேட்டு யாரும் வரவேண்டாம் என்றும் கிராம மக்கள் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்