"தாமிரபரணியில் குப்பை போட்டால் அபராதம்.." - அதிரடியாக பறந்த உத்தரவு

Update: 2024-01-31 17:10 GMT

தாமிரபரணி ஆற்றில் குப்பைகளை கொட்டுவோர் மீது ஏன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவர்கள், தன்னார்வலர்களை இணைத்து ஏன் தூய்மை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆற்றை சுத்தப்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்