பைக்கில் பறந்த 33 லட்சம்... அரிவாள் கும்பல் செய்த பயங்கரம்... அதிர வைக்கும் சம்பவம்

Update: 2024-04-18 14:18 GMT

நெல்லை நாங்குநேரியில், அரிவாளை காட்டி மிரட்டி சுமார் 33 லட்ச ரூபாய் பணத்தை கும்பல் வழிப்பறி செய்த வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாங்குநேரி அருகேயுள்ள வாகைக்குளம் பகுதியில் இந்த வழிப்பறி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 33 லட்ச ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்த முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோரிடமிருந்து 8 பேர் கொண்ட கும்பல் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். உடனடியாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வாகைக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். மூவரிடம் இருந்து 27 லட்ச ரூபாய் வரையிலான பணத்தை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஐந்து பேரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தேர்தல் நேரத்தின்போது சுமார் 33 லட்ச ரூபாய் பணத்துடன் இருவர் பைக்கில் சென்றது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்