நாங்குநேரி சம்பவம்..எஸ்.சி,எஸ்.டி ஆணைய உறுப்பினர் சொன்ன தகவல் | Nellai | Tamilnadu

Update: 2023-08-13 16:00 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.சி. எஸ்.டி ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை நடத்தினார். நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி, சக மாணவர்களால் தாக்கப்பட்டனர். இந்நிலையில், சின்னத்துரை பயின்ற வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், எஸ்.சி எஸ்.டி ஆணைய உறுப்பினர் ரகுபதி விசாரணை மேற்கொண்டார். அங்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்