"இதை பார்க்கும்போது என் நெஞ்சம் கனக்கிறது " - ரசிகர்கள் முன் கண்கலங்கிய டி.ராஜேந்தர்

Update: 2023-08-06 03:46 GMT

மயிலாடுதுறை தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு இயக்குநர் டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள சியாமளாதேவி அம்மன் கோயிலில் நேற்று வழிபட்ட டி.ராஜேந்தர், இன்று சென்னை செல்வதற்காக ரயில்நிலையம் வந்தார். அப்போது, அவருடம் பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் படித்த கல்லூரி, தான் பயணித்த ரயில், அதே ரயிலில் எடுக்கப்பட்ட ஒரு தலை ராகம் என கண்கலங்கி நினைவு கூர்ந்தார். தரங்கம்பாடி ரயில் இல்லை, ரயில் வழித்தடம் இல்லை, அந்த‌த் தடம் தான் இருக்கிறது என்ற டி.ராஜேந்தர், மீனவ மக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்