அசுர வேகத்தில் வந்த லாரி..! தலை நசுங்கி உயிரிழந்த தாய்,மகன்.. தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-01-05 03:21 GMT

தூத்துக்குடி அருகே சாலையை கடக்க முயன்ற தாயும் மகனும், லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பெண் ஒருவர், 8- வயது மதிக்கத்தக்க மகனுடன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது லாரி மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக லாரியின் ஓட்டுனர் சுரேஷை கைது செய்துள்ள போலீசார், இறந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்