தாய்மார்களே!``இந்த முகாமுக்கு மிஸ் பண்ணாம போயிருங்க"

Update: 2024-03-02 11:37 GMT

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் நாளை 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாகவும், இதன் மூலம் ஐந்து வயதுக்குட்பட்ட 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். நாளை ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்