விடிந்தால் திருமணம்.. மண்டபத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய கும்பல்.. பெண் வீட்டார் 15 பேருக்கு நேர்ந்த கதி

Update: 2024-03-28 06:37 GMT

கடலூர் அருகே திருமணம் நடைபெற இந்த மண்டபத்திற்குள் புகுந்து கும்பல் ஒன்று தாக்கியதில், மணப்பெண் வீட்டை சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சாலக்கரையில் உள்ள மண்டபத்தில் தொட்டி பெரிய காலனியை சேர்ந்தவர் சவுந்தருக்கும், கோட்டக்குப்பம் பகுதியை பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதனையொட்டி, திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு அதே மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் மண்டபத்தின் அருகே நின்ற பெண் வீட்டாரிடம், சாலக்கரையை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள், பெண் வீட்டாரை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், மண்டபத்தின் முன் நின்ற தனியார் பேருந்தின் கண்ணாடியையும், இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருமண வீட்டார் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒன்று கூடவே, போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாலக்கரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்