இன்னும் 10 நாட்களில் கல்யாணம்.. வருங்கால கணவருடன் சென்ற போது நினைத்து பார்க்க முடியாத கோரம்..

Update: 2024-04-18 06:58 GMT

#thanthitv #accidenttruck #villupuram #bride

இன்னும் 10 நாட்களில் கல்யாணம்..

வருங்கால கணவருடன் சென்ற போது

நினைத்து பார்க்க முடியாத கோரம்

நொடியில் முடிந்த கனவு - கலங்கடிக்கும் சம்பவம்

செஞ்சி அடுத்த சே.பேட்டை கிராமத்தை சேர்ந்தவர், காயத்ரி. இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தனது வருங்கால கணவரான பாலமுருகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது புத்தகரம் பகுதியில், கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டரை பாலமுருகன் முந்த முயன்றார். இதில், காயத்ரி நிலை தடுமாறி கீழே விழுந்து, டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து, சாலையை அகலப்படுத்தாததே, இந்த விபத்துக்கு காரணம் என்று கூறி, உடலை எடுக்க விடமால் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்