ஊதாரியாக சுற்றி திரிந்த மகன்.. கட்டையால் அடித்து கொன்ற தாய், தந்தை

Update: 2024-04-26 10:13 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே, மதுபோதையில் தகராறு செய்த மகனை, பெற்றோர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மன்னார்குடி அருகே வடகோவனூர் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் - மாலா தம்பதியின் மூத்த மகன் வெங்கடேஷ் பிரசாத், மதுபோதையில் பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் வெங்கடேஷ் பிரசாத் மதுபோதையில் தகராறில் ஈடுபடவே, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, அவரை கட்டையால் அடித்துள்ளனர். இதில் நிலைகுலைந்த வெங்கடேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்