கள்ளழகர் வையாற்றில் இறங்கும் நிகழ்வு "..இதை கண்டிப்பாக செய்யக்கூடாது" நீதிமன்றம் போட்ட உத்தரவு..!

Update: 2024-04-03 13:39 GMT

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடைவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு செய்து பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே நீர் பீய்ச்ச வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கக் கூடாது எனவும், இதனை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்