அதிர வைத்த கரூர் படுகொலை... 6வது நபர் திடீர் சரண் - நீதிபதி அதிரடி உத்தரவு

Update: 2024-02-23 17:47 GMT

கடந்த 2012-ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்குச் சென்று விட்டு திரும்பியவர்கள் மீது மதுரை, சிந்தாமணி அருகே மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் தாக்குதல் தொடுத்தது. இதில், 7பேர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவரை, கடந்த 19 ஆம் தேதி பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக கும்பல் படுகொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த மனோஜ் கண்ணன் என்ற 21 வயது இளைஞர் ஒருவரும் சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தற்போது சரணடைந்திருக்கிறார். அவரை வருகின்ற 29 ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் முதலில் சரணடைந்த ஐவரை போலீஸ் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்