மதுரை சித்திரை திருவிழா விவகாரம்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Madurai

Update: 2024-04-05 11:20 GMT

மதுரை சித்திரை திருவிழாவிற்கு அதிக அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் போது, போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல் மருத்துவ சேவை, குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டு உள்ளதை உறுதிபடுத்த வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்