திடீரென கத்தி கூச்சலிட்ட மனைவி...ஐகோர்ட் ஊழியர் மர்ம மரணம் - உள் பக்க பூட்டு.. உள்ளே நடந்தது என்ன?

Update: 2024-02-11 08:43 GMT

பள்ளிப்பட்டு அருகே நீதிமன்ற ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். சிலம்பரசன் தனது வீட்டில் படுகாயங்களுடன் இருப்பதாக, அவரது மனைவி கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து அவரை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிலம்பரசனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்