குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா - ஆடிப்பாடி பக்தர்கள் தரிசனம்

Update: 2023-10-23 11:54 GMT

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் எட்டாம் நாளான நேற்று பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. 8-ம் நாளான நேற்று அம்மன் கசலட்சுமி கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கமல வாகனத்தில் வீதி உலா வந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும், வேடமணிந்து ஆடிப்பாடி வந்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்

Tags:    

மேலும் செய்திகள்