உலக நன்மைக்காக பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் வந்த 8-ஆம் வகுப்பு மாணவி

Update: 2023-11-22 18:04 GMT

திருவண்ணாமலையில், உலக நன்மைக்காக தேவாரம், திருவாசகம், திருப்புகழ் மற்றும் முருகர் பக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி, எட்டாம் வகுப்பு மாணவி கிரிவலம் மேற்கொண்டார். திருக்கோவிலூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவியான ஹரிணிஸ்ரீ, கார்த்திகை தீபத் திருவிழா நாட்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தேவாரம், திருப்புகழ், திருவாசகம் மற்றும் முருகர் பக்தி பாடல்களுக்கு 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையயில் நடனம் ஆடி வருகிறார். உலக நன்மைக்காகவும், உலகில் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று இருக்க வேண்டியும் மாணவி பரதநாட்டியம் ஆடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்