சுமாரான பிளானில் களம் இறங்கிய திருடன்..உள்ளாடையில் 2 லட்சம்..ஸ்பாட்டில் தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2024-03-05 15:52 GMT

போச்சம்பள்ளி அருகே கடந்த 25 ஆண்டுகளாக நகைக்கடை வைத்திருப்பவர் கிருஷ்ணன். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கடையை விரிவுபடுத்தி பிரம்மாண்டமாக மாற்றிய நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் ஊழியர்கள் கடையை மூடி விட்டு புறப்பட்டுள்ளனர். சுமார் 2 மணியளவில், நகைக்கடையின் அருகிலுள்ள வங்கியின் காவலாளி சிங்காரவேலன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 5 முறைக்கும் மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் மீண்டும் வந்ததை அறிந்து அவர் சந்தேகமடைந்திருக்கிறார். அப்போது, மர்மநபர் ஒருவர் நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரத்தால் அறுத்து உள்ளே நுழைவதை கண்ட அவர், போலீசில் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நகைக்கடையை சுற்றி வளைத்த நிலையில், உள்ளே இருந்த கொள்ளையரை கையும் களவுமாக கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்