பிரபல தனியார் வங்கியால் அரளி விதை அரைத்து குடித்த பெண்

Update: 2024-04-26 08:57 GMT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குழுக் கடனை செலுத்துமாறு தனியார் வங்கி ஊழியர்கள் வற்புறுத்தியதால் மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூரைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி செண்பகவல்லி, பதினோரு மாதங்களுக்கு முன்பு, கோவில்பட்டியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 10 மாத தவணையை கட்டிய நிலையில், கடந்த மாதத்திற்கான தவணையை கட்டாததால், வங்கி ஊழியர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று வங்கி கடனை செலுத்துமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த செண்பகவல்லி, அரளி விதையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அருகில்இருந்தவர்கள் மீட்டு, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்