கோவை திருநங்கை கொலையில் ட்விஸ்ட்.. பிடிபட்ட சென்னை IT ஊழியர்.. பணம் பறித்த வெறியில் ஆள்மாற்றி கொன்றது அம்பலம்

Update: 2024-02-03 03:51 GMT

தெலுங்குபாளையத்தை சேர்ந்த திருநங்கை தனலட்சுமி கோவையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், இவருக்கு மருதமலை ரோட்டில் வசிக்கும் மாசிலாமணி என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், தனலட்சுமி மாசிலாமணியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், தனலட்சுமியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னையை சேர்ந்த ஐ.டி.ஊழியர் தினேஷை கைது செய்தனர். விசாரணையில் ஐ.டி.ஊழியர் தினேஷ், மருதமலைக்கு வந்த போது சிலர் அவரிடம் பணத்தை பறித்து சென்றதாகவும், இது குறித்து அவர் திருநங்கை மாசிலாமணி வசிக்கும் பகுதிக்கு சென்ற போது, மாசிலாமணி அவரது நண்பர் மணி, தினேஷ் மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்ததது. இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ், மாசிலாமணியை கொல்ல அவரது வீட்டுக்கு சென்ற போது, திருநங்கை தனலட்சுமி மட்டும் தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், அவர் தான், மாசிலாமணி என எண்ணிய தினேஷ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் தனலட்சுமியை குத்திக்கொலை செய்ததும் விசாரணையில் அம்பலமானது......

Tags:    

மேலும் செய்திகள்