Account-க்கு லட்சக்கணக்கில் வந்த கொண்டேயிருந்த பணம்.. வசமாக சிக்கிய கார் டிரைவர்.. அதிர்ச்சி

Update: 2024-05-27 03:24 GMT

கோவை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வாங்கி மோசடி செய்த கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் நல்லமங்களத்தை சேர்ந்த

ஜேசுராஜா என்பவர், மதுரையில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றுவதாக பலரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பி கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த

சக்திவேல் என்பவர் தனது மனைவிக்கு

அரசு வேலை கோரி 25 ஆயிரம் ரூபாய்

முன்பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீதி 2 லட்சம் ரூபாயை வாங்க வீட்டுக்கு வந்த ஜேசுராஜாவிடம் அடையாள

அட்டை கேட்ட போது சக்திவேலுக்கு

கொலை மிரட்டல் விடுத்து தப்பியோடி

விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜேசுராஜாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஜேசுராஜா ஏற்கனவே இருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜேசுராஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்