ஊழல் செய்ததால் பணி நீக்கம்..ஆத்திரத்தில் சர்ச்சுக்குள் புகுந்து ரகளை செய்த பாதிரியார்கள்

Update: 2024-03-31 11:56 GMT

கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தேவாலயத்தில், பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்துவதற்காக நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இருவரும், அத்துமீறி தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த கதவுகளை உடைத்ததுடன் சிசிடிவி கேமராக்களையும் உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்