"தடயங்களை அழிக்க முயற்சி" - நீதிபதி எடுத்த அதிரடி முடிவு

Update: 2024-02-09 10:51 GMT

உதகை நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், தொலைபேசி அழைப்புகள் குறித்து ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை என்றும், அந்த அறிக்கை வந்த பிறகு மேலும் விசாரிக்க வேண்டி உள்ளதால் கால அவகாசம் தேவை என நீதிபதியிடம் கோரினார். எதிர் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு பங்களாவில் தடயங்களை அழிக்கும் முயற்சி நடைபெறுவதாகவும், அங்கு நீதிபதி நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். இது தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்