கருப்புக் கொடிகளால் சூழ்ந்த கிராமம் அதிகாரிகளுக்கு எதிராக களமிறங்கிய மக்கள்
Karurமாவட்டம் மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமமக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள கன்னி வாய்க்காலை விடுவிக்க அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர்கள், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, மக்களவை தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.