நகை கடைக்காரர் வீட்டில் கைவரிசை - தீரன் பட பாணியில் போலீசார் அதிரடி

Update: 2024-03-27 04:09 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் மகாவீர் . கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் சுமார் 182 சவரன் நகைகள் மற்றும் லட்சக் கணக்கிலான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதற்கு முன்னதாக, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரது வீட்டிலும் 15 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததது தெரியவர போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதனிடையே, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் கொள்ளையரை கண்டுபிடித்த போலீசாருக்கு, அவர் வெளி மாநிலத்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தீரன் அதிகாரன் ஒன்று பட பாணியில் வெளி மாநிலங்களுக்கு கிளம்பி சென்ற போலீசாரின் தனிப்படை, அந்திரா, தெலங்கனா மற்றும் கர்நாடகாவில் தங்கி தங்களின் விசாரணை விரிவுபடுத்தினர். இதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கொள்ளையர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், காஞ்சிபுரத்தை போல இந்தியாவின் பல இடங்களில் இவர் கைவரிசை காட்டி வந்தது தெரியவர, சதீஷிடம் இருந்து 708 கிராம் தங்க நகை மற்றும் 36 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்