சும்மா சென்ற காரை மறித்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி...டென்சனான டிரைவர் இறங்கி செய்த சம்பவம்

Update: 2024-05-09 08:31 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, மீன் வியாபாரி ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற மீன் வியாபாரி, சாலையில் சென்றவர்களிடம் மதுபோதையில் தகராறு செய்த நிலையில், அவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், அவ்வழியே சென்ற கார் ஒன்றை மறித்து அதன் கண்ணாடியை உடைத்த நிலையில், பதிலுக்கு சக்திவேலை தாக்கி அவரது மண்டையை கார் ஓட்டுநர் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், சக்திவேலின் மகனும் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்பட்ட நிலையில், சக்திவேலின் மகனை கைது செய்த போலீசார், தலையில் காயமடைந்த சக்திவேலை மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்