அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டில் கைவரிசை..! 86 சவரன் நகை, ரூ.23 லட்சம் அபேஸ்..! | Kallakurichi

Update: 2024-02-16 03:52 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, அரசுப் பேருந்து நடத்துனர் வீட்டில் 86 சவரன் நகை மற்றும் 23 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.வி. பாளையம் கிராமத்தில் அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வரும் அருள்ஜோதி என்பவர், குடும்பத்துடன் புதுச்சேரி சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. புகாரின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நிலையில், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்