கல்லூரியில் மாணவியுடன் பேசியதால் மாணவர் எடுத்த விபரீத முடிவு.. - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

Update: 2024-02-15 16:09 GMT

கச்சிராயபாளையம் அருகே உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர், சக மாணவி மாணவர் ஒருவருடன் பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தற்காலிக பேராசிரியர்கள் விசாரித்தபோது, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவரை முதல்வரிடம் அழைத்துச் சென்றபோது, பயந்துபோன மாணவர் திடீரென கல்லூரி வளாகத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த மாணவரை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலைக்கு முயன்ற மாணவர் மதுபோதையில் இல்லை என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்