பாளையங்கோட்டை ஜெயிலில் நடந்த சண்டை - படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கைதி

Update: 2024-02-07 11:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மருதவேல் என்பவர், விசாரணை கைதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும், சிறைக்குள் இருந்த மற்றொரு கைதியான பால சுப்பிரமணியத்துக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்ட நிலையில், ஒருவரையொருவர் கண்மூடித்தனமாக தாக்கி மோதிக்கொண்டுள்ளனர். இதில், படுகாயமடைந்த மருதமலை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த மோதலின் பின்னணி குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்