" PFI உடன் தொடர்புடையவர் மனநோயாளியா..?" - H.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2023-10-27 05:59 GMT

 PFI அமைப்புடன் தொடர்புடையவரை மனநோயாளி என்று சட்ட அமைச்சர் கூறியிருப்பது, மாநில அரசின் அசட்டையை காட்டுகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா விநோத், PFI உடன் தொடர்புடையவர் என்பது பிரச்சனையை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என்று இணை ஆணையர் கூறிய நிலையில், வெடித்ததாக எப்ஐஆரில் பதிவு செய்திருப்பது, ஆளுநரின் பாதுகாப்பை மாநில அரசு கேள்விக் குறியாக்கி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்